Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையம், ராஜாஜி குப்பம், வலம்புரி விநாயகர், அறுபடைவீடு பாலசெல்வகுமரன் ஆலயங்கள் கும்பாபிஷேக விழா உடன் முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன.
கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 05:00 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
இதனையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் குமாரபாளையம் ஆனந்தாஸ்ரம குரு முதல்வர் பூர்னானந்தா சரஸ்வதி சுவாமிகள், வேதாந்த சிந்தன சாது சமாஜ ஆஸ்ரம குரு முதல்வர் சித்ருபானந்த சுவாமிகள், முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்பட பலர் பங்கேற்றனர்.